Monday, October 30, 2006

சந்தி சிரிக்கும் ததஜவின் ஷரீஅத் தீர்ப்பாயம்

வானை விஷமாக்கும் வதந்திகள்
REAL FACE EXPOSED!!


விண்வெளியில் நீந்திச் செல்லும் செயற்கைக் கோள்கள் மனித வரலாற்றில் செய்தித் துறைகளில் பெரும் புரட்சியை வெடிக்கச் செய்திருக்கின்றன.

தொலைக்காட்சிகளில் வெளிச்சமிடும் வண்ணக் காட்சிகள் ஆகட்டும். செவிகளில் செய்தி சொல்லும் செல்போன்களாகட்டும். அதில் கண் சிமிட்டி வந்திறங்கும் குறுஞ் செய்திகள் (SMS) ஆகட்டும். மின் அஞ்சல்களில் வந்து குவிகின்ற கொத்துக் கொத்தான கடிதங் களாகட்டும். எல்லாமே வானில் மிதக்கும் செயற்கைக் கோள்களால் தான்.

இந்த வகையில் வானம் வசப்பட்டு விட்டது என்று சொல்லலாம். அதே சமயம்இ அந்த வானம் விஷப்பட்டு விட்டது என்றும் சொல்லலாம்.
ஆம்! இன்று இ-மெயில்களிலும்இ எஸ்.எம்.எஸ்.-களிலும் பொழிகின்ற வதந்தி மழை - வசந்த மழையை மிஞ்சி விட்டது. அதனால் வானம் விஷப்பட்டு விட்டது என்று தெளிவாகச் சொல்லலாம்.


அரிவாள் முதல் அணு சக்தி வரை உள்ள ஆற்றல்கள் அனைத்தும் ஆக்கத்திற்குப் பயன்படுத்தப்படுவது போன்று அழிவிற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டில் எது அதிகம் என்று பார்த்தால் அழிவிற்குப் பயன்படுவது தான் அதிகம் என்று அடித்துச் சொல்லலாம்.
அது போன்று தான் இந்த அதி நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் அற வாழ்க்கைக்குப் பயன்படுத்தப்படுவதைப் போல்இ ஆபாசம் - அவதூறு வகைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அதே சமயம்இ இரண்டில் எது அதிகம் என்று பார்த்தால் ஆபாசத்திற்கும்இ அவதூறுக்கும் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.


இந்தக் கண்ணோட்டத்தின் படி பார்க்கும் போது இன்றைக்கு முஸ்லிம்கள் இந்தத் தகவல் தொடர்பு சாதனங்களை இதற்காக சாதாரணமாகப் பயன்படுத்துகின்றனர். அதிலே ஏகத்துவவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் நமது முன்னாள் சகாக்கள்இ இந்தச் சாதனங்களை சாதாரணத்திலும் சர்வ சாதாரணமாக இந்த வகைக்காகப் பயன்படுத்துகின்றார்கள்.

அவர்களை விட்டு நாம் பிரிந்தவுடன்இ ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்து கொண்டு இவர்கள் எங்கே வளரப் போகின்றார்கள் என்று மனக் கணக்குப் போட்டார்கள். ஆனால் அவர்களது கணக்கையும்இ கணிப்பையும் பொய்யாக்கிஇ அல்லாஹ்வின் அருளால் அவர்களை விடப் பன்மடங்கு மிகப் பெரிய சக்தியாக நமது ஜமாஅத் உருவெடுத்துள்ளது. இதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

அதனால் இன்று அவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் அவதூறுகள் மற்றும் வதந்திகளைப் பரப்புவதாகும். நேரில் வாய் மொழியாகவும் மறைமுகமாக SMS இ-மெயில் மூலமாகவும் கள்ள வெப்சைட் மூலமாகவும் அவதூறுகளைஇ வதந்திகளைப் பரப்புவதைப் பகுதி நேரப் பணியாக அல்ல; முழு நேரத் தொழிலாகச் செய்து வருகின்றார்கள்.

இவ்வாறு களமிறங்கிய இவர்களுக்கு மார்க்கமோ மறுமையோ கிடையாது. அதனால் அவர்கள் இதையும் செய்வார்கள்; இதற்கு மேலும் செய்வார்கள். இவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. நாம் கவலைப்படுவதெல்லாம் தூய்மையான ஏகத்துவக் கொள்கைகளைக் கடைப் பிடிப்பவர்கள் கூட அவர்கள் விரிக்கும் 'வலைத் தளத்தில்' வீழ்ந்து" அதை நம்பி ஏமாந்து விடுவது தான். மேலும் படிக்க..... (ஏப்ரல் 2006) ஏகத்துவம் மாத இதழ்)

மேற்கூறிய அனைத்தும் தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தின் பத்திரிகையான ஏகத்துவம் ஏப்ரல் 2006 இதழில் ததஜ வின் மாநில நிர்வாகி ஷம்சுல்லுஹா என்பவரால் எழுதப்பட்டது.


இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் எதை (கள்ள வெப்சைட், வதந்தி, எஸ்.எம்.எஸ்,கள்ள இ.மெயில் மூலம் அவதூறு பரப்புவதை) ஹராம் என்றும் அதை செய்பவர்களுக்கு மார்க்கமோ, மறுமையோ கிடையாது. அதனால் அவர்கள் இதையும் செய்வார்கள்; இதற்கு மேலும் செய்வார்கள். இவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை என்றெல்லாம் எழுதியுள்ளார்களோ அதை (கள்ள வெப்சைட், வதந்தி, எஸ்.எம்.எஸ்,கள்ள இ.மெயில் மூலம் அவதூறு பரப்புவதை) தங்களுக்கு 2005 லேயே ஹலாலாக்கி கள்ள வெப்சைட் நடத்துவதற்கும் அவதூறு பரப்புவதற்கும் புனித மக்கா நகரில் கூடி தீர்மானம் போட்டு அதை ததஜ வின் தலைவர் கிரிமினல் பி.ஜே அவர்களும் அங்கீகரித்து எழுத்து மூலமாக ஃபத்வா வழங்கியுள்ளது நிறைய பேருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.


இதுதான் இந்த ததஜ என்ற தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தின் உண்மை முகம். இவர்கள் தங்களின் கூற்றிற்கும் செயலிற்கும் மாறுபட்டவர்கள். எதை மற்றவர்கள் செய்யக்கூடாது என்று சொல்கிறார்களோ அதையே தாங்கள் செய்தால் அது நல்லதாம். உதாரனம் விபச்சாரம் செய்யக்கூடாது என்று பிரச்சாரம் செய்வார்கள் ஆனால் அதையே தங்களது முழு நேரத்தொழிலாக இதன் நிர்வாகிகள் செய்வார்கள் அதை கண்டுபிடித்து எழுதினால் அவதுர்று என்றும் வேறு வகையிலும் தங்களின் இந்த செயலை நியாயப்படுத்த முயல்வார்கள். வட்டி வாங்ககூடாது, வரதட்சினை வாங்க கூடாது, தவ்ஹித் முறைப்படி திருமனம்...எல்லாம் மற்றவர்களுக்கு மட்டும்தான் தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தின் நிர்வாகிகள் இவை எதையும் செயல்படுத்த மாட்டார்கள் மாறாக ஹராமாக்கப்பட்ட அனைத்தையும் செய்து விட்டு தவ்ஹித் பெயரில் நியாயப்படுத்தவார்கள். இதுதான் இவர்கள் போடும் இரட்டை வேடம். இது பல முறை பல சகோதரர்களாலும் ததஜ வில் இருந்து விலகிய முன்னால் நிர்வாகிகளாலும் நிறுபிக்கப்பட்டுள்ளது.


கடந்த 10.08.2005 அன்று புனித மக்கா நகரில் கூடிய ததஜ வின் சவுதி நிர்வாகம் போட்ட தீர்மானத்தில் கள்ள வெப்சைட் நடத்துவதென்றும் அதன் மூலம் தங்களது பழைய சகாக்களையும்( தமுமுக) மற்ற எதிரிகளையும் அவர்களின் குறைகளை அம்பலப்படுத்தி நாரடிப்பது என்றும் அதை கள்ளத்தனமாக நடத்துவதென்றும் தீர்மானம் போட்டுள்ளார்கள். (தீர்மான நகல் 5 ம் பக்கம், புதிய விஷயங்கள் கருத்துக்கள் பற்றிய ஆய்வு பகுதியில் 14 வது பாய்ன்ட்) இந்த கூட்டத்தில் கழந்து கொண்டு இந்த தீர்மானம் நிறைவேற்றியவர்கள் பக்கம் 1 மற்றும் பக்கம் 2 .


கள்ள வெப்சைட் நடத்தவும் மற்றவர்கள் மீது அவதூறு பரப்பவும் ததஜ போட்ட தீர்மானத்தின் நகல்




இந்த தீர்மானத்தை அங்கீகரித்தும் கள்ள வெப்சைட் எப்படி நடத்துவது, அதற்கு நிர்வாகிகள், மற்றும் அவதூறுகளை எப்படியெல்லாம் மாட்டிக் கொள்ளாமல் பரப்புவது என்றும் அதற்கு உதவுவதற்கு மாநிலத் தலைமை தயாராக உள்ளதாகவும் உலகத்திலேயே முதல் முறையாக இது போன்று ஒரு அவதூறு பரப்புவதற்காக வேண்டி தனது இயக்கத்தில் தனி ஒரு டிபார்ட்மென்டை உருவாக்கிய பெருமை தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தின் மாநிலத் தலைவர் கிரிமினல் பி.ஜெயினுல்லாபுதீனையே சாரும்.

கள்ள வெப்சைட் நடத்த அனுமதித்து அதன் மூலம் அவதூறுகளை பரப்ப ஐடியா வழங்கி பி.ஜே எழுதிய கடிதம்



இப்போது மக்கள் அனைவருக்கும் விளங்கியிருக்கும் யார் உண்மையில் பல பெயர்களில் வெளிச்சம், ஓன் ஹார்ட், tmmktmmk என்று கள்ள வெப்சைட்டுக்களை நடத்துவது என்றும் யார் உண்மையில் கறுப்பு இ.மெயில்களை தீன் முஹம்மது, ரஸ்மி, முகம்மது அலி, சைதை அலி, உ.உ.கூ உமர் தற்போது புதிதாக செந்தமிழ் செல்வி (ததஜ வின் இந்த மெயில் கிடைக்கப்பெறாதவர்கள் இங்கு கிளிக் செய்து ததஜ வின் புதிய தவ்ஹித் பிரச்சாரம் படிக்கவும்) என்ற பெயர்களிலும் அவதூறுகளையும் பொய்களையுமு் பரப்பி வருவது என்று.

இந்த கிரிமினல் பி.ஜேயும் அவரின் ஜமாத்தும் மக்களை பல முட்டாலாக்குவதற்கென்று தனி பிரிவையே அமைத்து செயல்படுவதை இதன் மூலம் அறிந்திருப்பீர்கள். இவர்கள் இப்படித்தான் மற்ற அமைப்பினரை தாக்கி மற்றவர்கள் பெயரில் கள்ள நோட்டிஸ் போடுவது சமயங்களில் தங்களை யேதாக்கி தமுமுக மற்றும் ஜாக் போட்டது போல் கள்ள நோட்டிஸ் போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். அந்த வகையில் சமீபத்தில் இவர்களால் "இணையங்களும் இயக்கங்களும்" என்ற தலைப்பில் மிகவும் புத்திசாலித்தனமாக மற்றவர்களும் நம்பும் விதமாக தந்திரமாக நடுநியைாளர் எழுதுவது போன்று இவர்களை விமர்சிப்பவர்கள் எல்லாம் பைத்தியக் காரர்கள் என்றும் ததஜ வை விமர்சிப்வர்கள் ஏதோ ஒரு பதவியில் இருந்து நீக்கப்பட்டு அதனால் மனநிலை பாதித்தவர்கள் என்றும் அதனாலேயே இது போல் ததஜ வின் தலைமையை பற்றி அவதூறு பரப்புகின்றார்கள் என்றும் எழுதப்பட்டு கள்ள மின்னஞ்சல்கள் மூலம் பரப்ப பட்டது.

இந்த கட்டுறை அப்படியே உணர்வு லே-அவுட்டில் இருந்ததன் மூலமே விளங்கியிருக்க முடியும் இதை யார் எழுதியிருப்பார்கள் என்று. இப்போது இந்த பதிவை படித்து விட்டு அந்த "இணையங்களும் இயக்கங்களும்" என்ற ததஜ வினரின் கட்டுரையை படியுங்கள் உண்மை விளங்கும்.

"எச்சரிக்கை" என்ற கட்டுரையை நாம் வெளியிட்டதும் பல இலங்கை இந்திய சகோதரர்களிடம் இருந்தும் இன்னும் பல நடுநிலை சகோதரர்களிடம் இருந்தும் கண்டனங்கள் கிளம்பின ஆத்தூர்வாசி போன்ற ததஜ வின் சகோதரர்களும் இதற்காக தங்களது எதிர்ப்புக்களை தெறிவித்தனர். நாம் அந்த விஷயத்தை சற்று வண்மையாக கையான்டிருப்பது உண்மைதான் ஆனால் அதுதான் உண்மை அதை இவர்கள் யாராலும் மறுக்க இயலாது. தவ்ஹிதை கூறக்கூடியவர்கள், முஸ்லிம்கள் இப்படியும் இருப்பார்களா? என்ற ஆதங்கத்தில் அதை படிக்க கூடிய நம்மாள் அதை ஜீரனிக்க இயலவில்லை. ஆனால் என்னதான் நம்மாள் ஜீரனிக்க இயலாவிட்டாலும் உண்மைகளை மறைக்க இயலாதுதானே!.

தங்களுக்கு ஏற்ப்பட்ட சங்கடங்களையும் இன்னும் இந்த விஷயத்தை (அப்துல் ரஹ்மான் பிர்தெளசி, கோவை ஜாபர்) எளிமையாக வண்மையின்றி கூறியிருந்தால் இன்னும் மிகுந்த
மக்களை சென்றிருக்கும் என்றும். இனிமேல் வண்மையாக எழுத வேண்டாம் என்றும் ஆலோசனை வழங்கிய இந்திய இலங்கை சகோதரர்களுக்கும் நாம் தவறு செய்யும் போதெல்லாம்
சுட்டிக்காட்டி திருத்தி கொண்டிருக்கும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றி மற்றும் உங்கள் உணர்வுகளை புன்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகின்றேன்.


அத்துடன் ஒவ்வொரு முறையும் தங்கள் மீது யாராவது ஆதாரப்பூர்வமாக குற்றச்சாட்டுக்களை வைத்தால் ஒன்று அந்த நபரை தங்களது எதிரி இயக்கத்துடன் இணைத்துவிடுவது இல்லையென்றால் ஏதாவது ஆபாசமாக எழுதியோ அல்லது பைத்தியம் அந்த சின்ட்ரோம் இந்த சின்ட்ரோம் என்று எழுதியோ நிகழ்வை திசை திருப்பி விடுவது அதன் மூலம் மக்களை தங்கள் மீதான் குற்றச்சாட்டுக்களை மறக்க செய்வது.

நாம் தற்போது இங்கு ததஜ வினருக்கும் "இணையங்களும் இயக்கங்களும்" போன்று திறமையாக விஷமங்களை பரப்பி் ததஜ என்னமோ கல்தோன்றி மன்தோன்றா காலத்தே முன் தோன்றிய மாபெரும் சமுதாய இயக்கம் போல மாயை ஏற்படுத்தி பிலிம் காட்டுபவர்களுக்கும் சவால் விடுக்கின்றோம்.


முகவைத்தமிழனாகிய நான், ஏதாவது ஒரு இயக்கத்திலோ அல்லது அமைப்பிலோ உறுப்பினராகவோ அல்லது நிர்வாகியாகவோ இருப்பதாகவோ அல்லது எப்போதாவது ஏதாவது ஒரு கால கட்டத்தில் இருந்ததாகவோ அல்லது ஏதாவது ஒரு அமைப்பில் பதவியில் இருந்து
நீக்கப்பட்டதாகவோ ஆதாரங்கள் மூலம் நிறுபித்தால் நாம் உடணடியாக நமது எழுத்தை நிறுத்துவதற்கு தயாராக உள்ளோம் அத்துடன் எமது வலைப்பதிவும் மூடப்படும்,இனிவரும் காலங்களிலும் நாம் எழுத மாட்டோம்.


நடுநிலையாளர்களுக்கும், பொது மக்களுக்கும், ததஜ வின் சகோதரர்களுக்கும் நாம் ததஜ வின் தலைமையின் தவறுகளையும் ஊழல்களையும் ஆதாரப்புர்வமாக நிறுபித்தும் அம்பலப்படுத்தியும் வருகின்றோம் இது அவதூறு பரப்புவதற்காக அல்ல மாறாக "ஒரு முஸ்லிமின் குறைகளை மற்ற முஸ்லிம் மறைக்க வேண்டும்" என்ற ஹதீஸ் மற்றும் குர்ஆன் வசனங்களுக்குள் மறைந்து கொண்டு தவறுகளை திரும்ப திரும்ப செய்வதாலும் எதையெல்லாம் மற்றவர்கள் செய்யக்கூடாது என்று பிரச்சாரம் செய்கிறார்களோ அதையெல்லாம் தானும் தனது நிர்வாகிகளும் செய்து வருவதாலும். ததஜ என்ற இந்த இயக்கம் தவ்ஹித் பரப்ப வந்த இயக்கம் அல்ல மாறாக அப்துல் ரஹ்மான் பிர்தெளசி, கோவை ஜாபர் போன்ற விபச்சாரார்களையும் பி.ஜே பாக்கர் அலாவுதீன் போன்ற கிரிமினல்கள் தங்களுக்கு சொத்து சேர்க்கவும், கைதாவதில் இருந்து தப்பிக்கவும், தங்கள் தவறுகளுக்கும் வயாபாரத்திற்கும் இந்த சமுதாயத்தை உபோயோகப்படுத்தவும் ஆரம்பிக்கப்பட்டதே ததஜ என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

கோவை ஜாபர் மீதும் அப்துல் ரஹ்மான் பிர்தெளசி மீதும் நாம் வைத்த குற்றச்சாட்டுக்களையும் பாலியல் புகாரையும் தைரியமிருந்தால் மறுக்க சொல்லுங்களேன் பார்ப்போம். ததஜ வின் சகோதரர்கள் இது குறித்து தங்கள் தலைமை சொல்வதை நம்பாமல் கேள்வ கேளுங்கள். இவர்களை இன்னும் மாநில நிர்வாகிகளாக வைத்திருப்பது ஏன் என்று கேளுங்கள். இல்லையென்றால் இவர்கள் செய்தது எந்த வகையில் சரி என்று கேளுங்கள்.


அல் கோபர் கிளை-2 துனை தலைவர் ஜொனோபர் போன்றவர்கள் செய்த தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக பாவ்லா காட்டும் உங்கள் தலைமை தனது இயக்கத்தின் பெரிய தலைகள் அனைவர் மீதும் பெரிய குற்றச்சாட்டுக்கள் இருக்கும் போது நடவடிக்கை எடுப்பதில்லை? அல் கோபர் கிளை-2 துனை தலைவர் ஜொனோபரை நீக்கியது போல் பாக்கரையும் அப்துல் ரஹ்மான் பிர்தெளசி கோவை ஜாபர் போன்றோரையும் நீக்காதது ஏன்?


பொது மக்களும், ததஜ வின் சகோதரர்களும், மற்ற நடுநிலை சகோதரர்களும் இங்கு நாம் எடுத்து வைத்துள்ள ஆதாரங்கள் மூலம் உண்மை என்ன என்பதை உணர்ந்திரப்பீர்கள். இவர்கள் இங்கு இடப்பட்டுள்ளவை அனைத்தும் அவதூறு உண்மை இல்லை என்று மறுப்பதற்கும் நிறைய நேரம் ஆகாது. ஆனால் இறைவன் முன் இவை அனைத்தும் ஒரு நாள் உண்மைப்படுத்தப்படும். அன்று ததஜ வின் அனைத்து குற்றங்களும் உங்கள் முன் ஆதாரங்களோடு கொண்டு வரப்பட்டும் மெளனிகளாக இருந்ததற்காக நீங்களும் பதில் கூற வேண்டிவரும்.


இந்த பதிவின் மூலம் நாம் கள்ள வெப்சைட் நடத்துவது யார், கறுப்பு இ.மெயில் அனுப்புவது யார், அவதுர்று பரப்புவது யார் என்று நிறுபித்துள்ளோம். இவையனைத்தையும் தானே செய்து கொண்டு உலகத்திலேயே தானும் தனது இயக்கமும் மட்டும் தான் யோக்கியம் எனவும் மற்ற இயக்கங்களும் மற்ற அனைவரும் அயோக்கியர்கள் எனவும் மற்ற இயக்கங்கள் அனைத்தும் கள்ள வெப்சைட் மூலமும் கள்ள நோட்டிஸ் மூலமும் அல்லாஹ்விற்கு அஞ்சாது அவதுர்று பரப்புவதாக முகாரி பாடும் இந்த அயோக்கிய கூட்மான ததஜ வையும் அதன் கிரிமினல் தவைர்களையும் மக்கள் அடையாளங் கண்டு கொள்ள வேண்டும்.


குறிப்பு : இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆதாரங்கள் அனைத்தும் ததஜ வின் செயல் பாடுகள் பிடிக்காமல் (டான் ஊலல், பாலியல் குற்றங்கள், சுனாமி பிதடரா ஊலல்) அதை எதிர்த்து தலைமையை கேள்வி கேட்டதால் அறிவிப்பே இல்லாமல் கட்டம் கட்டி நீக்கப்பட்ட முன்னால் நிர்வாகிகளால் நமக்கு கையளிக்கப்பட்டதாகும். சரியான தளம் கிடைக்காததால் அவர்கள் இத்தனை காலமும் மெளனியாக இருந்தார்கள். இனி அவர்கள் பேசுவதற்கும் ஆதாரங்களை வெளியிடுவதற்கும் தயாராக உள்ளார்கள். இவர்களும் மனநோயாளிகளா?

நாம் எவ்வளவு இடைஞ்சல்கள் வந்த போதிலும் உண்மைகளை மக்களுக்கு அடையாளம் காட்டும் இப்பணியை தொடர்வோம்...சிலர் கேட்கிறார்கள் ஏன் ததஜ வின் செய்தியே 80% உள்ளது என்று. ததஜ மட்டுமல்ல தமுமுக, விடியல். மு.லீக், ஜாக் என் யாருடைய ஏமாற்று வேலைகளும் ஆதாரங்களுடன் கிடைக்கப்பெற்றால் நாம் அதை மக்களுக்கு அம்பலப்படுத்துவேலாம். ஆனால் தற்போது மற்ற இயக்கங்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் அரசியல் இயக்கங்களாகவோ அல்லது கமுதாய இயக்கங்களாகவோ உள்ளன அவர்கள் இஸ்லாத்தின் பெயரால் தவறு செய்வதில்லை. ஆனால் இஸ்லாத்தை கேவலப்படுத்தும் விதமாக இந்து சாமியார்களுக்கு சிறதும் குறைவில்லாமல் மதத்தை கூறி அக்கிரமங்கள் புறிந்த காஞ்சிமட சங்கராச்சாரியாரின் காம லீலைகளுக்கு சற்றும் குறைவில்லாமல் ஏகத்துவம் தவ்ஹித் என்ற பெயரில் ததஜ வினர் மதத்தின் பெயரில் ஆன்மீகத்தின் பெயரில் தவறுகள் செய்வதால் நாம் மக்கள் முன் நல்லவர்களாக வல்லவர்களாக வேடமிடும் இந்த தரங்கெட்ட ததஜ வினரின் லீலைகளை அம்பலப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்..


நன்றி
முகவைத்தமிழன்
இஸ்லாம் முஸ்லிம் காரைக்குடி

Monday, September 18, 2006

உள்ளாட்சி தேர்தலில் திமுக விற்கு ஆதரவு - தமுமுக அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலில் திமுக விற்கு ஆதரவு - தமுமுக அறிவிப்பு



தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் பத்திரிகையாளர் சந்திப்பில்

கோவை செப்டம்பர் 17,2006 கோவை ஆத்துப்பாலம் ஜே.பி. மஹாலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் தலைவர் பேராசிரியர் எம், ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. அதன் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் தமுமுக தலைவர் ஜனாப் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தமுமுக அதன் அமைப்பு நிர்நய சட்டத்தின்அடிப்படையில் தேர்தலில் போட்டியிடாது என்றும் ஆனால் வரும் இடைத்தேர்தலிலும் மற்றும் உள்ளாட்சி தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை வழங்கும் என்றும் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் தெறிவித்தார். அத்துடன் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படும் ஜெயலலிதா வீட்டை முஸ்லிம்களை திரட்டி வரும் செப்டம்பர் 22 ம் தேதி மாலை முற்றுகையிடப்போவதாகவும் , முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை வலியுருத்தி டெல்லியில் பேரணி நடத்த போவதாகவும் கோவையில் கொல்லப்பட்ட முஸ்லிம் இளைஞரின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கி உடணடியாக குற்றவாளியை கைது செய்யவேண்டும் என்றும் கூறினார்.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
மாநிலச் செயற்குழுக் கூட்ட தீர்மானங்கள்



தமுமுக மாநிலச் செயற்குழு மேடையில் தலைவர்கள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தனது செயற்குழுவில் எடுத்த தீர்மானங்களின் நகல் (பத்திரிகையாளர்களுக்கு வழங்கியது)

1. மாநிலச் செயலாளர் அப்துர் ரஹீம் அவர்கள் மரணத்திற்கு இரங்கல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயலாளர் மவ்லவி பி. அப்துர் ரஹீம் அவர்கள் மே 3, 2006 அன்று தேர்தல் பிரச்சார பணிக்கு இடையே சாலை விபத்தில் மரணமடைந்ததற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. தமுமுக தொடங்கப்பட்ட காலம் முதல் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து வடசென்னை மாவட்ட தொண்டர் அணிச் செயலாளராக பணியாற்றி அதன் பின்னர் மாநில தொண்டர் அணிச் செயலாளராகவும் பின்னர் மாநிலச் செயலாளராகவும் ஏற்றம் பெற்ற அப்துர் ரஹீமின் இழப்பு கழகத்திற்கும், சமுதாயத்திற்கும் மிகப் பெரும் இழப்பாக இச்செயற் குழு கருதுகின்றது. தன்னலமற்ற முறையில் அனைவருடன் இன்முகத்துடன் பழகும் அப்துர் ரஹீம் ஆற்றிய அளப்பெரும் பணிகளில் அழைப்பு பணி, சுனாமி நிவாரணப் பணிகள், டெல்லி போராட்டம், குஜராத் கலவரம் மற்றும் பூகம்பம் முதலியவற்றை நெகிழ்ச்சியுடன் இச்செயற்குழு திரும்பி பார்க்கின்றது. அப்துர் ரஹீம் அவர்களது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது. அப்துர் ரஹீம் அவர்களுடன் சாலை விபத்தில் இறந்த ஒட்டுனர் பைசுர் ரஹ்மான் மற்றும் அப்துர் ரஹீம் அவர்களது நண்பர் மவ்லவி சமியுல்லாஹ் ஆகியோரின்குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. சமுதாயப்பணிகளுக்கிடையே இன்னுயிரையும் நீத்த இந்த மூன்று சகோதரர்களின் மறுவாழ்விற்கு மாநில செயற் குழு இறைவனிடம் இறைஞ்சுகின்றது.

2. வாக்காளர்களுக்கு நன்றி
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு இச்செயற்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

3. திமுக அரசுக்கு பாராட்டு
சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை மிக வேகமாக நிறைவேற்றி வரும் கலைஞர் தலைமையிலான தமிழக அரசை இச்செயற்குழு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, வண்ணத் தொலைக்காட்சி பொட்டி,
ஏழைகளுக்கு நிலம் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசு காட்டி வரும்அதே வேகத்தில் சிறுபான்மையினருக்கு வாக்களிக்கப்பட்ட தனி இடஒதுக்கீடு உடனடியாக கிடைக்க கலைஞர் அரசு உடனே ஆவணச் செய்ய வேண்டுமென இச்செயற் குழு கேட்டுக் கொள்கிறது.

தமுமுக செயற்குழுவில் கூடியவர்கள்



4. ஜெயலலிதா வீடு முற்றுகைப் போராட்டம்
அப்பழுக்கற்ற முறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பணியாற்றி வரும் தமிழக முதல்வர் கருணாநிதியின் முதன்மைச் செயலாளர் முனீர் ஹோடாவை தேச துரோகி என்றும், அப்துன் நாசர் மதானி தப்பிக்க வழிவகைச் செய்தார் என்று அவதுறாக பேசிய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கின்றது. ஜெயலலிதாவின் சிறுபான்மை விரோதப் போக்கை கண்டித்து வரும் செப்டம்பர் 22 மாலை அவரது வீட்டை முற்றுகையிடுவதென இச்செயற்குழு தீர்மானிக்கின்றது.


5. அப்பாவி முஸ்லிம் விசாரணை சிறைவாசிகள் உடனே விடுதலைச் செய்யப்படவேண்டும்
எட்டாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிவரும் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை உடனே விடுதலைச் செய்ய ஆவனச் செய்ய வேண்டுமென இச்செயற்குழு தமிழக அரசை இச்செயற்குழு கோருகின்றது. முஸ்லிம்கள் விசாரணைசிறைவாசிகள் தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணை 2 மாதக் காலத்திற்குள் முடிக்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

6. உள்ளாட்சி தேர்தல் தமுமுக போட்டியிடாது
தமுமுக அமைப்பு நிர்ணயச் சட்டத்தின் அடிப்படையில் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடாத அமைப்பாக தமுமுக செயல்படும். உள்ளாட்சி தேர்தலிலும் தமுமுக போட்டியிடாது.


7. உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு தமுமுக ஆதரவு
வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதென இச்செயற்குழு முடிவுச் செய்கிறது.

8. மதுரை மத்திய தொகுதி
மதுரை மத்திய தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை தமுமுக ஆதரித்து பிரச்சாரம் செய்யும்

தமுமுக செயற்குழுவில் கூடியவர்கள்


9. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி டெல்லியில் பேரணி
அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க ஆவணச் செய்யப்படுமென ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறைந்த பட்ச செயல்திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளுக்கும் மேலாகியும் முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு குறித்த ஆவணச் செய்யப்படாதை வருத்தத்துடன் இச்செயற்குழு பதிவுச்செய்கிறது. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தலைநகர் டெல்லி வரும் மார்ச் 2007ல் பேரணி நடத்துவதெனவும் இச்செயற்குழு தீர்மானிக்கின்றது.

10. குண்டு வெடிப்பு வழக்குகளுக்கு சி.பி.ஐ. விசாரணை தேவை
சமீப காலமாக இந்தியாவில் நடைபெற்று வரும் குண்டு வெடிப்புகள் மிகப் பெரிய ஐயத்தை நாட்டு மக்களிடம் தோற்றுவித்துள்ளது. சமூக நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் வகையிலும்மத்தியில் நடைபெற்று வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இத்தகைய பயங்கரவாதம் நடைபெறுவதாக இச்செயற் குழு கருதுகின்றது.டெல்லி ஜும்ஆ பள்ளிவாசல், வாரணாசி, மும்பை மற்றும் மலேகான் பள்ளிவாசல் ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு பின்னால் இஸ்ரேலின் மொசாத் உளவுத்துறைக்கும், சங்பரிவார் அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்படும் நிலையில் இவை குறித்து வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும். இதற்காக நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு விசாரணை செய்ய வேண்டுமென இச்செயற்குழு கோருகின்றது.

11. இஸ்ரேலுடன் துதரக உறவை துண்டிக்க வேண்டும்
லெபனான் மற்றும் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் பயங்கரவாத நடவடிக்கைகளைநடத்திவருகின்றது. சர்வதேச பயங்கராதத்திற்கு துணையாக இருக்கும் அந்த இஸ்ரேலுடன் இந்திய அரசு து£தரக உறவை துண்டிக்க வேண்டுமென்றும், டெல்லியில் இருக்கும் இஸ்ரேல் து£தரை வெளியேற்ற வேண்டும் என்றும் இச்செயற்குழு மத்திய அரசு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

12. முத்துப்பேட்டை பொய் வழக்கை வாபஸ் வாங்குக
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சென்ற அதிமுக ஆட்சியில் செப்டம்பர் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற விநாயகர் ஊர்வல கலவரத்தில் முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டது. அவ்வழக்குகளை தமிழக அரசின் வாபஸ் பெறவேண்டும் என இச்செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. முத்துப்பேட்டையில் ஆண்டு தோறும் விநாயகர் ஊர்வலத்தின் போதும் ஏற்படும் பதட்டத்தை தணிக்க மாற்றுப் ஊர்வல பாதையை அரசு உடனே வரையறுக்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

13. ஊடகங்கங்களுக்கு நிதானம் தேவை
பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் பல நேரம், விசாரணைகளுக்கு முன்பே யூகங்களை செய்திகளாக்கும் போக்கு அதிகரித்து வருவது கவலையளிக்கின்றது. இதனால் பலரும் பாதிக்கப்படும் நிலையில் முஸ்லிம் சமூகம் மிக அதிகமாகவே பாதிக்கப்படுகின்றது. எனவே பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி துறை நண்பர்கள் மிகுந்த கவனத்துடன் மிக பொறுப்புடன் தங்கள் பணிகளை தொடர வேண்டுமென இச்செயற்குழு உரிமையுடன் கேட்டுக் கொள்கிறது.

14. இலங்கை பிரச்னை
இலங்கையில் சிங்கள அரசின் பொறுப்பின்மையும், விடுதலைப்புலிகளின் துன்புறுத்தலும் அங்கு மூன்றாவது சமூகமாக வாழும் முஸ்லிம்கள் பெரும் இழப்புகளுக்கு இலக்காகியுள்ளனர். இலங்கையில் தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களின் வாழ்வுரிமை காக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென சர்வதேச சமூகத்தை¢இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

15 கோவையில் கொலைச்செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குக
கோவையில் ஜேப்படி திருடர்களின் அட்டகாசம் அதிகரிப்பது கவலையளிக்கிறது. கடந்த செப்டம்பர் 16 அன்று பேரூந்தில் பயணம் செய்த ஃபைசல் ரஹ்மான் என்பவரை பிக்பாக்கெட் கொள்ளையர்கள் படுகொலை செய்தது அதிர்ச்சி அளிக்கின்றது. படுகொலைச் செய்யப்பட்ட பைசல் ரஹ்மான் குடும்பத்திற்கு ரூ2 லட்சம் கருணைத் தொகையும், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. கோவை பிக்பாக்கெட் திருடர்கள் மீது காவல்துறை துரித நடவடிக்கை எடுக்கவேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.


13. சென்னைக்கு துணை நகரம் தேவை
சென்னை மாநகர மக்களின் நலன்களுக்காவும், எதிர்கால வசதிகளுக்காகவும் சென்னைக்கு அருகே துணை நகரம் அமைக்கும் திட்டத்தை அரசியல் குறுக்கீடுகளை பொருட்படுத்தாமல் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

14. பெப்சி கோக்கிற்கு தடை வேண்டும்
மக்கள் உடல் நலனுக்கு பெரும் கேடுவிளைவிக்கும் பெப்சி, கோகோ கோலா பானங்களை உடனடியாக தடைச் செய்ய வேண்டுமென இச்செயற்குழு மத்திய மாநில அரசுகளை இச்செயற்குழு கோருகின்றது.

15. தர்மபுரி ரயில் பாதை இருவழியாக்கப்பட வேண்டும்
ஒருவழிப் பாதையாக இருக்கும் ரயில் பாதையை தர்மபுரியில் இருவழிப் பாதையாக மாற்றினால் தர்மபுரியிலிருந்து வடமாநிலங்களுக்கு நேரடியாக ரயில் போக்குவரத்து செல்ல ஏதுவாக இருக்கும். எனவே தர்மபுரி வழியாக சேலம் முதல் பெங்களுர் வரைச் செல்லும் ரயில் பாதையை இருவழிப் பாதையாக மாற்ற இச்செயற்குழு கோருகின்றது.

16. தென்கரைக்கோட்டை

தர்மபுரி மாவட்டம் தென்கரைக்கோட்டையில் 100 வருடங்களாக வசித்துவரும் முஸ்லிம் குடும்பங்களுக்கு பட்டா வழங்க ஆவண செய்ய தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

17. சூலுர்ர் ஜமாஅத் நிலம் மீட்கப்பட வேண்டும்
கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் சூலூர் சுன்னத் ஜமாஅத்திற்குச் சொந்தமான இடத்தை 3 1ஃ2 ஏக்கர் இடத்தை லஷ்மி மற்றும் மூன்று நபர்களால் அ.இ.அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரின் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். ஊடனடியாக மாவட்ட நிர்வாகம் இந்த நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற வஃக்பு போர்டின் உத்தரவையும் நீதிமன்ற உத்தரவையும் அமல்படுத்தாத மாவட்ட அதிகாரிகளை வன்மையாக இச்செயற்குழு கண்டிக்கின்றது. பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தை நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி உடனடியாக மாவட்ட நிர்வாகம் மீட்டுத்தர வேண்டும் என்று இச்செயற்குழு கோருகின்றது.

18. கோவைக்கு பாஸ்போர்ட் அலுவலகம் தேவை
கோவை மாவட்டத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச்செயற்குழு கோருகின்றது.கோவை மாவட்டம் உட்பட தமிழகத்தில் பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு பாஸ்போர்ட் விசாரணை வந்தால் காவல்துறையைச் சேர்ந்த விசாரணை அதிகாரிகள் திட்டமிட்டு அலைக்கழிப்பதை செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், காவல்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு, தவறு செய்யும் பாஸ்போர்ட் விசாரணை (உளவுத்துறை) அதிகாரிகளை தண்டிக்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

19. விமான நிலையத்தில் கெடுபிடி
பணி நிமித்தமாக வெளிநாடு செல்லும் முஸ்லிம்கள் விமான நிலையங்களில் முஸ்லிம்கள் என்கிற ஒரே காரணத்திற்காக விசாரணை என்கிற பெயரில் கடும் சோதனைகளும், சந்தேகம் என்கிற பெயரில் பாஸ்போர்ட்டை முடக்கும் நடவடிக்கைகளும் இழக்காக்கப்படுவதை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

20. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கிரசண்ட் நகர் பள்ளிவாசலில் 2001 டிசம்பர் மாதம் அப்துர் ரஷீத் கொலைச் செய்யப்பட்டார். இந்த வழக்கில் காவல்துறையினர் உண்மை குற்றவாளிகளை உடனே கைதுச் செய்ய வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.இந்த வழக்கில் பொய்குற்றம் சுமத்தப்பட்ட அப்துர் ரஷீத் அவர்கள் மகன் முகைதீன் பிச்சையை இவ்வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென்றும், நிறுத்திவைக்கப்பட்டுள்ள அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட ரூ 2 லட்சம் அரசு உதவி தொகையை உடனே வழங்க வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கோருகின்றது.

22.தரம் உயர்த்தப்பட்ட தமிழ்வழி பள்ளிக்கூடங்களில் மானியம் அளிக்கப்படாத வகுப்புகளுக்கு மானியம் வழங்க அரசு உடனே ஆவணச் செய்ய வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

23. அரசு மற்றும் அரசு உதவிப் புரியும் கல்லுர்ரிகளில் நீண்டகாலமாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப புதிய அரசு முன்வந்துள்ளது வரவேற்கத் தக்கது. அதே நேரம் அறிவியல் துறை ஆசிரியர்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற எழுதப்படாத விதிமுறை பின்பற்றப்படுகிறது. தமிழ், அரபி, உருது, வரலாறு உள்ளிட்ட துறைகளுக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

செய்திகள் மற்றும் புகைப்படம் : சகோ.கோவை தங்கப்பா

Saturday, July 15, 2006

மும்பையை மறு குஜராத்தாக்குவதற்கு திட்டமா?




மும்பையை குஜராத்தாக்குவதற்கு ஃபாசிஸ்ட்டுகளின் திட்டமா?


"வன்முறை என்பது மதங்களின் கோட்பாடோ கொள்கையோ அல்ல.....எந்த ஒரு மதமும் வன்முறையை ஆதரிப்பதில்லை மாறாக வன்முறை என்பது தனிப்பட்ட நபர்களின்
சித்தாந்தங்களினால் உண்டான விருப்பு வெறுப்புக்களின் கோர வெளிப்பாடே..... எந்த ஒரு அரசியல் காரணம் கொண்டும் அப்பாவி பொதுமக்கள் மீது ஏவிவிடப்படும் வன்முறைகளையும் கொலைத்தாக்குதல்களையும் நியாயப்படுத்துதல் ஆகாது."


நேற்று (11-07-2006) மாலை 6 மணியளவில் மும்பையில் பல்வேறு இடங்களிள் அப்பாவி பொதுமக்கள் மீது ஆன்மையற்ற மனநோய் பிடித்தவர்களால் நடத்தப்பட்ட கோழைத்தனமான கொடூர தாக்குதல்களினால் இதுவரை 190 க்கும் அதிகமானோர் அக்கிரமாமாக கொல்லப்பட்டும் மற்றும் நூற்றுக்கணக்கானோர் உடல் உறுப்புக்களை இழந்து ஊனமாகியும் உள்ளார்கள்.

யுத்தமல்லாத சமாதான நேரத்தில் அமைதியான ஒரு நகரில் அப்பாவிகள் மற்றும் சாதாரண ஆயுதம் தறிக்காத பொது மக்கள் மீது காட்டுமிரண்டித்தனமான ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பலியானவர்கள் அனைவரும் தனிப்பட்ட ஒரு இனத்தையோ, மதத்தையோ சார்ந்தவர்கள் அல்ல மாறாக இந்து, முஸ்லிம், கிருத்துவர்கள் என அனைத்து தரப்பு அப்பாவி பொதுமக்களும் இதில் அடங்குவர். இது மாபெரும் குற்றமாகும் இதைச்செய்தவர்கள் யாராக இருந்தாலும் பார பட்சமின்றி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் அதே சமயத்தில் இவர்கள் எந்த சமுதாயத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும். இக்குற்றவாளிகள் சார்ந்திருக்கும் சமுதாயம் எவ்வகையிலும் இவர்களின் மனிதநேயமற்ற செயல்களுக்கு காரணமாகாது. இம்மணநோய் பிடித்த சித்தாந்தவாதிகள் மத பேதமின்றி வன்மையாக கன்டிக்கப்பட வேண்டியவர்கள்.

அப்பாவி பொதுமக்கள் மீது தொடுக்கப்பட்ட இந்த கொலை வெறி தாக்குதலை எப்போதும் போல் "லஷ்கர்-இ-தொய்யிபா", "ஜெயஸ்-இ-முகம்மத்" போன்ற போர்வை கொண்டு மூடி நீர்த்துப்போகச் செய்திடாமல் இந்த கோழைத்தனமான மிருகவெறி தாக்குதலை இந்திய அரசு, நாட்டின் இறையான்மை மீது தொடுக்கப்பட்ட யுத்தமாக எண்ணி தனது அரசின் அனைத்து சக்திகளையும் திரட்டி தீவிர விசாரணை மேற்கொன்டு இம்முறை இதில் ஈடுபட்ட குற்றவாளிகளையும் அவர்களுக்கு துணை நின்றவர்களையும் நாட்டிற்கு அடையாளம் காட்டி சட்டத்தின் முன் நிறுத்திட வேண்டும். முக்கியமாக இந்த கோரச்சம்பவத்திற்கு மூலகாரணமானவர்களை அடையாளப்படுத்திட வேண்டும்.

இது போன்ற தொடர் குண்டுவெடிப்புகளின் மூலம் அதிகமான
உயிர்சேதத்தையும் பொருளாதார நஷ்ட்டங்களையும் ஏற்படுத்த வேண்டுமானால் மிக நுணுக்கமான திட்டமிடுதலும் அதைச்செயல் படுத்துவதற்காக வேண்டி மதங்களின் பெயரில் தனிப்பட்ட சிலரின் சுய சித்தாந்தங்களால் மூலைச்சலவை செய்யபட்ட ஆக்ரோசமான இளைஞர்களும், அதையும் விட அவசியத்தேவையாக உள்ளுர் தொடர்புகளும் அரசியல் பின்புலமும் இருந்தாக வேண்டும். இதுபோன்ற திறமைகள் உலகிலேயே சில இயக்கங்களிடம் தான் உள்ளன அத்தகைய இயக்கங்களில் இந்தியாவில் இயங்கிவரும்
ஃபாசிச இயக்கங்கலான ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, சிவசேனா,
பஜ்ரங்தள் போன்ற இயக்கங்களும் உள்ளடங்கும்.


கடந்த 1993 ம் ஆன்டு சிறுபான்மையின முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட கொடூர கொலைவெறி தாக்குதலுக்கு பின் நடந்த இது போன்ற தொடர் குண்டுவெடிப்பில் 250 க்கும் மேற்ப்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் அப்போது கூட இவர்களாளல் தாக்கப்பட்டவை இதுபோன்ற அப்பாவி பொதுமக்கள் பயணம் செய்யும் புகைவண்டிகள் அல்ல. மாறாக அரசின் அதிகார மையங்களும் வாத்தக மையங்களும் தான்.

அப்போது இதுபோன்றே தொடர் குண்டுவெடிப்புக்கள் சக்தி வாய்ந்த வெடிமருந்துகளை பயன்படுத்தி நடத்தப்பட்டன. அதிகமான பொருளிழப்பும் உயிரிழப்பும் ஏற்படுத்தப்பட்டன. இதைச்செயல் படுத்தியவர்கள் அன்றைய பம்பாயில் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர்கள் பம்பாய் நகரின் ஒவ்வொரு அசைவும் இவர்களின் சுட்டுவிரல் கொன்டு தீர்மானிக்கப்பட்டன. தாவுத் இபுறாஹிம், டைகர் மேமன், அபு சலீம் போன்றோர் அன்றைய அரசியல்வாதிகளின் பின்புலத்தோடு அண்டர்கிரவுன்ட் அரசாங்கத்தை நடத்தி வந்தார்கள் மற்றும் இவர்களுக்கு தொழில் நுட்ப ஆலோசனைகளை நமது எதிரி நாட்டின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ வழங்கியது மற்றும் அதைச்செயல்படுத்த நூற்றுக்கணக்கான இளைஞர்களை தங்களிடம் கொண்டிருந்தார்கள். அதன் விளைவே பம்பாய் தொடர் குண்டுவெடிப்புக்களும் அப்பாவி பொதுமக்கள் சாவுகளும். அதன் பின்னர் இவர்கள் இந்திய அரசால் களையெடுக்கப்பட்டார்கள்.

சரிந்து வரும் தங்களின் ஆதரவை நிலை நிறுத்தவும், அரசியல், பொருளாதார ரீதியல் தங்கள் பலத்தை பெருக்கவும், உற்சாகமிழக்கும் தங்கள் தொண்டர்களை உற்சாக மூட்டவும் ஒற்றுமையாக இணைந்து வாழும் சமூகங்களிடையே வெறுப்பை உருவாக்கி இரத்த ஆறுகளை ஓடச்செய்து மேற்கூறியவற்றை சாதிப்பதற்காக வேண்டி இதுபோன்ற கோரப்படுகொலைகளை செய்யத் தயங்காதவர்கள் தான் இந்த ஹெட்கோவர், சாவர்க்கர், மூஞ்சே மற்றும் கோல்வால்கர் என்பர்களின் சித்தாந்தத்தால் மூலைச்சலவை செய்யப்பட்ட ஃபாசிச இயக்கங்கலான ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, சிவசேனா, பஜ்ரங்தள் போன்ற இயக்கத்தினர்.

இவர்களிடம் மிக நுணுக்கமாக திட்டமிடக்கூடிய பல முன்னால் இரானுவ மற்றும் காவல்துறை உயரதிகாரிகளை கொண்ட குழு உள்ளது. இதுபோன்ற காரியங்களை செயல்படுத்துவதற்காக வேண்டி இராணுவப்பயிற்சி அளிக்கப்பட்டு ஹெட்கேவர், சாவர்க்கர், மூஞ்சே மற்றும் கோல்வால்கர் என்பர்களின் சித்தாந்தத்தால் மூலைச்சலவை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தொன்டர்களும் உள்ளனர்.

ஓவ்வொரு முறை தங்களின் செல்வாக்கு சரியும் போதும் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்று என்னும்போதும் இதுபோன்ற கொடூரமான கொலைகளை நிகழ்த்தி அதைக்கொன்டு சிறுபான்மையின் மக்கள் மீது கொடூர கொலைவெறித்தாக்குதல்களை நடத்தி தங்களை அரசியல் பொருளாதார ரீதியாக நிலைப்படுத்தி கொள்வார்கள். இந்த ஹெட்கேவர் என்ற தீவரவாதியின் சித்தாந்தத்தால் மூலைச்சலவை செய்யப்பட்ட கோட்சே என்பவனைக் கொண்டு நமது தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களை படுகொலை செய்தார்கள் ஹெட்கோவர், சவர்க்கர், மூஞ்சே மற்றும் கோல்வால்கர் என்ற இந்த பாசிச சக்திகளின் தலைமையில் இயங்கி வந்த அன்றைய தீவிரவாதக்குழுவினர். தேசப்பிதாவை கொன்றுவிட்டு அதைச்செய்தது முஸ்லிம்கள் என்ற பொய்ச்செய்தியை தங்களிடம் இருந்த ஊடகங்கள் வாயிலாக பரப்பினர். (இதற்காகவே திட்டமிட்டு அன்றைய முக்கிய ஊடகங்களான ரேடியோ நிலையங்களில் இந்த தீவிரவாத சித்தாந்தத்தால் மூலைச்சலவை செய்யப்பட்டவர்களும் ஆதரவாளர்களும் ஊடுருவச்செய்யபட்டிருந்தனர்) அதன் மூலம் மாபெரும் கலவரத்தை ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்கள் கொல்லப்பட்டன மேலும் பல்லாயிரக்கனக்கானோர் சொந்த நாட்டிலிருந்து அகதிகளாக துரத்தப்பட்டனர்.

இது போன்றே ஒவ்வொரு முறையும் நம் நாட்டில் கலவரங்கள் ஏற்படுத்தி ஆயிரக்கணக்கில் அப்பாவி உயிர்கள் கொல்லப்படும்போதும் அதற்கு முன்காரணியாக ஏதேனும் ஒரு சம்பவம் நடத்தி அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டு அதை சிறுபான்மை சமுதாயத்தின் மீது சுமத்தி அச்சமூகத்தினர் கூட்டம் கூட்டமாக இனப்படுகொலைக்குள்ளாக்க பட்டுள்ளார்கள். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் என்ற ஒன்றை நிகழ்த்தி அதில் சில உயிர்களை கொன்று அப்பழியை ஒன்றுமறியாத அப்பாவி முஸ்லிம் சமுதாயத்தின் மீது இட்டு முன்கூட்டியே திட்டமிட்டிருந்தபடி இச்சமூகத்தினர் மீது இந்த ஹெட்கோவர், சவர்க்கர், மூஞ்சே மற்றும் கோல்வால்கர் என்பர்களின் சித்தாந்தத்தால் மூலைச்சலவை செய்யப்பட்ட கும்பலின் மூலம் கொடூர தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இம்மக்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டார்க்ள. இதற்கு தீவிரவாதி ஹெட்கேவரின் சீடர்களான் அன்றைய உள்துறை அமச்சர் அத்வானி, பிரதமர் வாஜபாய் போன்றோரின் ஆசியுடன் குஜராத்தின் முதல்வர் நரேந்திர மோடி நரகாசுரனாக மாறி தனது அரசின் அனைத்து இயந்திரங்களையும் திட்டமிட்டபடி ஈடுபடுத்தி இம்முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அரசு இயந்திரங்களும் இதற்கு துணைபோயின எதிர்ப்பு தெரிவித்த நேர்மையான அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள் அல்லது மாற்றப்பட்டார்கள். மனிதாபிமானமற்ற மனிதப்படுகொலைகளை மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் இந்த ஃபாசிச பயங்கரவாதிகள் நடத்தினர். நாட்டின் ஜனாதிபதியால் கூட அவற்றை தடுத்து நிறுத்திட இயலவில்லை. சமூக ஒற்றுமை பற்றியும், மனித உரிமை பற்றியும் பேசிவரும் இந்திய அரசின் முகத்தில் மேலை நாடுகள் காறி உமிழ்ந்தன. உலகையே உலுக்கிய படுகொலைகளும் மாபாதகச்செயல்களும் அரச பயங்கரவாதமும் தேசபக்தி என்ற பெயரிலும் தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரிலும் அரங்கேற்றப்பட்டன.

மிக கவனமாக திட்டமிடப்பட்டு குஜராத்தின் முஸ்லிம்
இனத்தை சேர்ந்த கல்விமான்கள், வங்கி முகாமையாளர், வைத்தியர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பல்கலைக் கழக
மாணவர்கள், பட்டதாரிகள், பாடசாலை மாணவர்கள், இளைஞர் யுவதிகள் என பல வகையான புத்திஜீவிகளை அடையாளப்படுத்தி அழித்தனர். முஸ்லிம் சமுதாயத்தின் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக திட்டமிட்டு அழிக்கப்பட்டது. சொந்த மண்ணில் இம்மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். இவையனைத்தும் இந்த மதவெறிகொண்ட ஹெட்கோவரின் சீடர்களால் மிக கவனமாக திட்டமிடப்பட்டு செய்யப்பட்டது.


இப்பாசிச கும்பலின் தீவிரவாதச்செயல்கண்டு ஒட்டுமொத்த இந்தியாவும் தலைகுனிந்தது. இந்தியாவின் மதச்சார்பின்மை உலக அரங்கில் நகைப்பிற்குறியதாகியது. அப்படிப்பட்ட கொடூரங்கள் குஜராத்தில் அரங்கேற்றப்பட்டன. கற்பினியின் வயிறு கிழிக்கப்பட்டு அதிலிருந்த கருவை எடுத்து நெருப்பில் வீசினார்கள். சொந்த தந்தை, சகோதரன், கணவன், மகனின் கண் முன்னே பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு இவர்களின் பெண்மை சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.

ஆண்கள் அணிவகுக்க செய்யப்பட்டு குழந்தைகள் முதியோர் என்ற பாகுபாடின்றி படுகொலை செய்யப்பட்டு வீதியோரங்களிளும் வீடுகளிலும் எரிக்கப்பட்டார்கள். இறந்த மனித சடலங்களுக்குறிய மறியாதை கூட வழங்கப்படாமல் அவை எரிந்த மரத்தின் அடிப்பாகங்கள் போல் குஜராத்தின் வீதியெங்கும் வீசியெறியப்பட்டும் வீடுகளிள் குவிக்கப்பட்டும் கிடந்தன.

குஜராதின் வீதிகளிள் பிடித்து செல்லப்பட்ட நுற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் கத்தியால் குத்தியும், வாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டு டயர் போட்டு வீதிக்குக் குறுக்கே எரித்த கோரச் சம்பவம் இவ்வுலக மக்கள் மத்தியில் என்றும் மனதை விட்டு மாறாத வடுக்களாகப் பதிந்துள்ளது. முஸ்லிம் இனப்பெண்களும், ஆண்களும், குழந்தைகளும், முதியோர்களும் வீதியோரங்களில் படுகொலை செய்து மரங்களைக் குவிப்பது போன்று சடலங்கங்கள் எரிக்கப்பட்டு, எரிக்கப்பட்ட சடலங்கள் சுருண்ட வடிவில் எரிக்கப்பட்ட கட்டைகள் போன்று காணப்பட்டது. இவ்வாறு மனிதப் பெறுமதியையும், பண்பாடும் காலத்திற்குக் காலம் அருகிக் கொண்டு சென்றது. இதற்கு முழுநேரப் பங்காளிகளாக வி.எச்.பி ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்தீவிரவாதிகளுடன் அன்றைய இந்திய நாட்டின் பிரதமரும், உள்துறை அமைச்சரும் ரதயாத்திரைகள் நடத்தி ரத்த ஆறுகளை ஓடவிட்டவருமான அத்வானியும் மற்றும் மோடி அரசாங்கத்தின் காவல்துறையும் இயங்கின.இது வரை இந்த படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை மாறாக தங்களின் திட்டப்படி அரசபதவிகளிள் அமர்ந்துள்ளார்கள்.

இவையனைத்தும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டன. காரணம் சரிந்து வந்த தங்களின் செல்வாக்கை தூக்கி நிறுத்திடவும் தேர்தலில் வென்று ஆட்சியில் அமரவும் தான். அதற்காக முன்கூட்டியே திட்டமிடப்பட்டு ரயில் எரிக்கப்பட்டு அப்பழி அப்பாவி முஸ்லிம்கள் மீது இடப்பட்டு அவர்கள் கூட்டம் கூட்டமாக பேரினவாத தீவிரவாத கும்பல்களால் அரசின் ஆசிர்வாதத்தோடு படுகொலை செய்யப்பட்டார்கள். இதற்கு முந்தைய சம்பவங்களும் உதாரணங்களாக உள்ளன. தாங்கள் செல்வாக்கு குறையும் போதெல்லாம் ரதயாத்திரை நடத்தி ரத்த ஆறு ஓட்டுவது, அப்பாவிகளையும் தலைவர்களையும் கொன்று அப்பழியை சிறுபான்மையினர் மீது இட்டு தேச பக்தி என்ற பெயரில் வெறியாட்டம் ஆடுவது என்று.

ஆக இப்போது மும்பையில் நடந்த சம்பவமும் கூட கோத்ரா சம்பவம் மற்றும் தேசப்பிதா மகாத்மா படுகொலையைப் போன்றே திட்டமிட்டு நடத்தப்பட்டதாக இருக்கலாம். இது மும்பையை மறு குஜராத்தாக மாற்றுவதற்காக முன்னோட்டமாக கூட இருக்கலாம். இதற்கு கடந்த சில நாட்களாக ஃபாசிச தீவிரவாதக்குழுவான சிவசேனாவினர் மும்பையில் நடத்தி வரும் கொலை வெறி தாக்குதல் சம்பவங்களே உதாரணம்.


தற்போது இது போன்ற ஒரு திட்டமிட்ட அதிக உயிர் மற்றும் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தக்கூடிய தாக்குதல்களை நடத்தும் அளவிற்கு சிவசேனா, வி.எச்.பி. பஜ்ரங்கள் தவிர்த்து எந்த ஒரு குழுவும் மும்பையில் இயங்கி வருவதாக தெறியவில்லை. 1993 க்கு பிறகு தாவுத் இபுறாஹிம் போன்றோரின் அண்டர்கிரவுன்ட் அரசாங்கங்கள் ஒழிக்கப்பட்டு இப்போது அது போன்ற அண்டாகிரவுன்ட் அரசாங்கங்களை ஃபாசிச தீவிரவாதி சிவசேனா தலைவன் பால்தாக்கரேயின் குழுக்களே நடத்தி வருகின்றன. இவர்களுக்கு பலமான அரசியல் பொருளாதார பலமும் உண்டு. சரிந்து வரும் தங்களின் செல்வாக்கை நிலைநிறுத்துவதற்காக வேண்டியும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி எதிர் வரும் தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்காக வேண்டியும் குஜராத்தில் நடத்தியது போல் இந்த ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தை காரணமாக கொண்டு தேச பக்தி என்ற பெயரில் மதக்கலவரங்களை மும்பையெங்கும் ஏற்படுத்தி ஒரு குறிப்பிட்ட சிறுபான்மையினர் மீது இனச்சுத்திகரிப்பு செய்வதற்கு கூட இதைச்செய்திருக்கலாம்.

உடனடியாக இந்திய அரசு எந்த வித பாராபட்சமும் இன்றி அரசியல் அழுத்தங்களுக்கு பணியாது நேர்மையான விசாரணை மேற்கொன்டு குற்றவாளிகளை அவர்கள் யாராக இருந்தாலும் நாட்டிற்கு அடையாளப்படுத்தி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அப்படியில்லையெனில் இந்திய நாட்டில் அப்பாவி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.

ஒருவேளை இந்த சம்பவத்தில் எதிரி நாட்டவரோ அல்லது அவர்களின் உதவி பெறும் தீவிரவாத குழுக்கலோ ஈடுபட்டிருந்தால் அமெரிக்கா செய்வதுபோல் இந்திய அரசு தனது அனைத்து ராணுவ பலத்தையும் கொண்டு இக்குழுக்களை இயங்கும் இடத்தை கண்டறிந்து அழித்திட வேண்டும். தற்காப்பு நடவடிக்கையாக இதனை மேற்கொன்டு இந்திய பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேன்டிய கடமை அரசியல்வாதிகளுக்கு உள்ளது. ஏனெனில் அன்று 1931 ல் இந்து தீவிரவாத கும்பல்களின் சித்தாந்த தலைவர்களிள் ஒருவனான டாக்டர்.மூஞ்சே என்பவன் ஃபாசிஸ்டுகளின் தலைவனான முசோலினியை ஃபாசிஸ்டுகளின் அன்றைய தலைமை பீடமான போலசோவென்சியா விலேயே சந்தித்து உதவி பெற்றுள்ளான் இதுபோன்று அந்நிய ஃபாசிச அரசுகளின் உதவிகளைக் கொண்டே அன்று நமது தேசப்பிதா மகாத்மா படுகொலை செய்யப்பட்டார். ஆமதாபாத் கலவரம் போன்ற பல கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு தங்களை அரசியல் ரீதியாக ஸ்திரப்படுத்திக்கொண்டார்கள் இன்றை இந்திய ஃபாசிச தீவிரவாத குழுக்கலான ஆர்.எஸ்.எஸ் வி.எச்.பி பஜ்ரங்தள் போன்றோர்.

இது அமைதியாக வாழும் மும்பை மக்களிடையே மத துவேஷத்தை தூண்டி மும்பையை மறு குஜராத் ஆக்குவதற்கான 'கோத்ரா சம்பவம்' போன்ற திட்டமிடுதலாக கூட இந்த தாக்குதல் இருக்கலாம். அப்பாவி பொதுமக்கள் மீது தொடுக்கப்பட்ட இந்த கொலை வெறி தாக்குதலை எப்போதும் போல் ''லஷ்கர்-இ-தொய்யிபா'' ''ஜெயஸ்-இ-முகம்மத்'' போன்ற போர்வை கொன்டு மூடி மறைத்திடாமல், இந்த கோழைத்தனமான மிருகவெறி தாக்குதலை இந்திய அரசு தன்மீதும் தன் நாட்டின் இறையான்மை மீதும் தொடுக்கப்பட்ட யுத்தமாக எண்ணி தனது அரசின் அனைத்து சக்திகளையும் திரட்டி தீவிர விசாரனை மேற்கொன்டு இம்முறை இதில் ஈடுபட்ட குற்றவாளிகளையும் அவர்களுக்கு துனைநின்றவர்களையும் நாட்டிற்கு அடையாளம் காட்டி சட்டத்தின் முன் நிறுத்திட வேண்டும். முக்கியமாக இந்த கோரச்சம்பவத்திற்கு மூலகாரணமானவர்களை அடையாளப்படுத்திட வேண்டும். இந்திய அரசால் பொதுவாக எந்த சம்பவம் நடந்தாலும் குற்றம் சாட்டப்படும் அனைத்து அமைப்புக்களும் இந்த படுகொலையை கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. ஆக உண்மைக்குற்றவாளிகளை கண்டறிந்து மக்களுக்கு அடையாளப்படுத்தும் பொறுப்பு அரசை சார்ந்துள்ளது. பாரதப்பிரதமர் மதிப்பிற்குறிய மன்மோகன் சிங் அவர்கள் கூறியது போல் உண்மை குற்றவாளிகளை நாட்டிற்கு அடையாளப்படுத்துவார் என்று நம்புவோமாக.

உயிர், உடமைகளை, உறவுகளை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும்., அனுதாபத்தையும் தெறிவித்து இந்திய நாட்டின் இறையான்மை காக்கவும் எம்மக்கள் என்றும் ஒற்றுமையாக வாழவும் வேன்டி கண்ணீருடன் இறைவனை பிரார்த்தித்தவனாக விடைபெறுகின்றேன்.

நன்றி
முகவைத்தமிழன்
இந்தியப்பிரஜை
இஸ்லாம் இஸ்லாம் இஸ்லாம் தலித்
இஸ்லாம் இஸ்லாம் இஸ்லாம் தலித்
இஸ்லாம் இஸ்லாம் இஸ்லாம் தலித்

Monday, March 14, 2005

DREAMLAND

UNDER CONSTRUCTION


Blogger Templates by Isnaini Dot Com. Supported by Free Ebooks. Powered by Blogger